-mdl.jpg)
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நேற்று ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா சதமடித்தும், பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக முழுக்க முழுக்க பேட்டிங்-க்கு சாதகமான இந்த மைதானத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 10 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
கடந்த ஓராண்டாகவே காயம் காரணமாக சர்வதேச போட்டியில் பங்கேற்காமல் இருந்த பும்ரா அண்மையில் இந்திய அணிக்காக மீண்டும் கம்பேக் கொடுத்து இதுவரை தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட் எடுத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார்.