
கிரிக்கெட் உலகில் வெற்றிகரமான வீரர்களில் தாக்கம் நிறைந்தவர் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ். தற்பொழுது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துக் கொண்டு வந்தது.
இந்தியா வந்த அவரால் ஆரம்ப சில போட்டிகளை காயம் காரணமாக விளையாட முடியவில்லை. அதற்குள் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி வரை தோல்வியடைந்திருந்தது. பிறகு அவர் காயம் சரியாக விளையாட வந்து உடனே இலங்கை அணி இடம் தோல்வி அடைந்தது. நேற்று இந்திய அணி இடமும் தோல்வியடைந்தது.
பென் ஸ்டோக்ஸ் காயம் சரியாகி விளையாட வந்தாலும் அவரால் தாக்கம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இங்கிலாந்து அணியின் நடப்பு உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மீது இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மெல்ல மெல்ல குற்றச்சாட்டுகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.