
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி மழையாலும் கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 48 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களையும் சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியும் சீரான இடைவேளையின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்களான டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்செல் ஓவன், சேவியர் பார்ட்லெட் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.