
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “உலகக்கோப்பை போன்ற தொடரில் ஆஸ்திரேலியாவை தேர்வு செய்வது எப்போதும் ஒரு பாதுகாப்பான தேர்வாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அழுத்தமான போட்டிகளில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அது எப்படியான சூழலாக இருந்தாலும் சரி. மேலும் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டுமே பயன்படுத்து ஆசியாவில் அவர்கள் வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர்.