
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு தனது அணியின் செயல்திறனைப் பாராட்டி, இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மேலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஒரு பெரிய உணர்வு என்றும், தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான அணிக்கு எதிரான இந்த வெற்றி எளிதானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்குறித்து பேசிய சான்ட்னர், “இப்போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்ததாக நாங்கள் துபாய் சென்று மீண்டும் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளோம். இப்போட்டியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்களுக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதன்மூலம் இறுதியில் எங்களால் ரன்களை சேர்க்க முடிந்தது.