
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்த்து மகாராஷ்டிரா புனே மைதானத்தில் தனது நான்காவது போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணியின் முதல் இரண்டு போட்டிகளை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தவறவிட்ட கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் களம் இறங்கினார். சிறப்பான டச்சில் தெரிந்த அவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து ஆட்டம் இழந்தார்.
அதே சமயத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்தில் அதிரடியாக துவங்குவதே தனது வேலை என்று வெளிப்படையாக அறிவித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு போட்டிகளாக அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.
தற்பொழுது இவர்கள் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், “கில் கொஞ்ச நேரம் களத்தில் செலவழிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரோஹித் சர்மா சரளமாக வேகமாகவே விளையாடுகிறார். எனவே கில் கொஞ்சம் நேரம் எடுக்கலாம். எனவே முதல் ஐந்து பத்து பந்துகளை பார்த்து விளையாடுங்கள். பிறகு தாக்கி விளையாடிக் கொள்ளலாம்.