
உலக கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக எதிர்பார்த்து இருந்த உலகக் கோப்பையின் இறுதி போட்டி நாளை குஜராத் அஹ்மதாபாத் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் எல்லா துறைகளிலும் மிக வலுவான அணியாக இருக்கிறது. மேலும் வீரர்களிடம் நல்ல நம்பிக்கை காணப்படுகிறது. அதேபோல் அணி சூழல் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கிறது.
ரோஹித் சர்மா கேப்டனாக மட்டும் இல்லாமல் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்திக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பேட்டிங்கில் உண்டாக்கும் தாக்கம் இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கிறது.
அவர் கொடுக்கின்ற தொடக்கத்தை வைத்துக்கொண்டு மற்றும் ஒரு அனுபவ நட்சத்திர வீரர் விராட் கோலி மிகப்பெரிய ரன்களை குவித்து எல்லாவற்றிற்கும் அர்த்தம் சேர்க்கிறார். அவர் தன்னுடைய தனிப்பட்ட ஸ்டிரைக் ரேட்டை பொருட்படுத்தாமல், அணி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றபடி பொறுமையாக இருந்து செய்கிறார்.