Advertisement
Advertisement
Advertisement

விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் - மாண்டி பனேசர்!

அடுத்த நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியைக் கண்டு பயம் கொள்ளாமல் தங்களது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

Advertisement
விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் - மாண்டி பனேசர்!
விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் - மாண்டி பனேசர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 30, 2024 • 05:52 PM

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 30, 2024 • 05:52 PM

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் அவர் இல்லாத வெற்றிடம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், விராட் கோலி இப்போட்டியில் விளையாடியிருந்தால் இங்கிலாந்து வீரர்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுத்திருப்பார் என முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய பனேசர், விராட் கோலி இப்போட்டியில் விளையாடி இருந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணி வீரர்கள் முகத்திற்கு நேராக சென்று,  ‘ஏய் நீ மீண்டும் அடித்து காட்டு; நீ எவ்வளவு நன்றாக விளையாடுகிறாய் என்று பார்ப்போம்’ என்று கூறியிருப்பார். இது தோல்வியைக் கண்டு பயம் கொள்ளாத இங்கிலாந்து அணி. அடுத்த நான்கு போட்டிகளிலும் அவர் தோல்வியைக் கண்டு பயம் கொள்ளாமல் தங்களது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார்கள்.

 

விராட் கோலி எப்போதும் போட்டிகளில் ஆர்வத்தை ஏற்படுத்துவார். அது தற்போதைய இந்திய அணியில் இல்லை. ஒருவேளை அடுத்த போட்டியிலும் இங்கிலாந்து வெற்றிபெற்றால் இந்திய அணி மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாகும். எனவே விராட் கோலி இல்லாமல் அனைத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ரோஹித் சர்மா தற்போது தள்ளப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்திய அணிக்கெதிரான இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் வெல்லும் என்று மாண்டி பனேசர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement