
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அறிமுக வீரர் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில் அவரது இடத்தை நிரப்பக்கூடிய வீரராக சாய் சுதர்ஷன் இந்த தொடரில் பார்க்கப்படுகிறார். ஏனெனில் நடந்து முடிந்த ஐபில் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக் விளைடியா சாய் 759 ரன்களைக் குவித்து, இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் வென்றுள்ளார். மேற்கொண்டு உள்ளூர் போட்டிகளிலும் அவர் தனது ரன் வேட்டையை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த விராட் கோலியாக சாய் சுதர்ஷன் இருப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போது இந்திய அணியில் சில நல்ல இளம் வீரர்கள் உள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் சாய் சுதர்சன். அவர் மிகவும் ஆக்ரோஷமாகவும் பயமற்றவராகவும் தெரிகிறார். இங்கிலாந்து சூழ்நிலைகளிலும் சர்ரே அணிக்காகவும் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.