Advertisement

சர்ஃப்ராஸை கானை எச்சரித்த மும்பை தேர்வுக்குழு உறுப்பினர்!

சர்பராஸ் கானின் இந்த பேட்டிக்கு, மும்பை அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் மிலிந்த ரீஜ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan January 20, 2023 • 17:07 PM
 Mumbai chief selector slams Sarfaraz Khan for making comments after latest Test snub
Mumbai chief selector slams Sarfaraz Khan for making comments after latest Test snub (Image Source: Google)
Advertisement

இந்திய அணி இளம் வீரர் சர்பராஸ்கான் கடந்த மூன்று ரஞ்சிக் கோப்பை சீசன்களில், தொடர்ந்து மிரட்டலாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். 2019-20 சீசன்களில் 928 ரன்களை குவித்த இவர், அடுத்த சீசனில் 982 ரன்களை சேர்த்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது துவங்கி நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை சீசனிலும் தொடர்ந்து அபாரமாக விளையாடி வெறும் 6 போட்டிகளிலேயே 556 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். டான் பிராட்மேனுக்கு அடுத்து, அதிக சராசரி வைத்துள்ள வீரராக இவர் திகழ்கிறார். ஆம், சர்பராஸ் மொத்தம் 37 முதல்தர போட்டிகளில் 80 சராசரியுடன் 3505 ரன்களை எடுத்திருக்கிறார்.

Trending


இருப்பினும், சர்பராஸ் கானுக்கு டெஸ்டில் இன்னமும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து சமீபத்தில் பேட்டிகொடுத்திருந்த சர்பராஸ் கான், இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிசிசிஐ மீது பலரும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில், சர்பராஸ் கானின் இந்த பேட்டிக்கு, மும்பை அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் மிலிந்த ரீஜ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில், “சர்பராஸ் கானுக்கு கிரிக்கெட் விளையாடுவது மட்டும் தான் வேலை. அதைவிட்டுவிட்டு தேவையில்லாததை அவர் பேசக் கூடாது. இப்படி பேசுவதால் மட்டும் எதுவும் நடந்துவிடப் போவது கிடையாது. சர்பராஸ் கான் இப்படி பொதுவெளியில் பேசுவதை தடை செய்ய வேண்டும்.

அணிக்காக ரன்களை சேர்க்க வேண்டும் என்பதுதான் அவரது பணி. பேட்டிங்கில் மட்டும்தான் அவர் கவனம் செலுத்த வேண்டும். அணித் தேர்வு குறித்து அவர் கருத்து தெரிவித்தால், அது அவருக்குத்தான் பிரச்சினையாக மாறும். சர்பராஸ் கான் சிறந்த பார்மில் இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நேரம் வரும்போது, வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். தற்போது அவருக்கு அணியில் இடமில்லை. அவ்வளவு தான்.

பயிற்சியாளர் அமுல் மஜுந்தர்தான் மும்பை அணியின் பயற்சியாளர். இவருடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளாத சர்பராஸ் கான், தந்தையை அழைத்து பயிற்சி மேற்கொண்டார். இது கண்டிக்கதக்க செயல். மஜுந்தர் அவருடைய காலத்தில் சிறந்த வீரர். அவரதை புறக்கணித்து சர்பராஸ் செயல்பட்டது தவறு. இதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும். திறமை இருக்கிறது என்பதற்காக சர்பராஸ் கான் துணிச்சலாக பேசி, சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் அனைவரும் திறமையானவர்கள் தான். நேரம் வரும்போது வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement