-mdl.jpg)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சமீப காலங்களில் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான புதிதில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் தற்போது விரைவில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறார்.
மேலும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்ற பாபர் ஆசாம் அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்து தற்போது சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.
இருப்பினும் அவரால் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப கடந்த காலங்களில் சதமடிக்காமல் தடுமாறியபோது சிறிது ஓய்வெடுத்து கம்பேக் கொடுத்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அஹ்மது ஆலோசனை கூறியுள்ளார்.