Advertisement
Advertisement
Advertisement

ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச அணி வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 18, 2024 • 15:08 PM
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி! (Image Source: Google)
Advertisement

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலை வகிக்கின்றன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜனித் லியானகே 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 101 ரன்களைக் குவித்து அசத்தினார். வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், முஸ்தஃபிசூர் ரஹ்மான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Trending


இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிவரும் வங்கதேச அணியில் அனாமுல் ஹக் 12 ரன்களுக்கும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியுள்ளனர். அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள தன்ஸித் ஹசன் - தாவ்ஹித் ஹிரிடோய் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் வங்கதேச அணி 14 ஓவர்க்ள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அதன்பின் அவரால் எழுந்து நிற்ககூட முடியாத நிலையில், அணியின் மருத்துவ குழுவினர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றனர். 

மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் முஸ்தஃபிசூர் ரஹ்மானை அவரது அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டுள்ள செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement