
இன்னும் சில தினங்களில் இந்தியாவில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டிகள் நாளை முதல் நடைபெற உள்ளது. இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற இருக்கின்ற காரணத்தினால் ஆசிய அணிகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள், தொடரில் திடீரென திருப்புமுனையை உண்டாக்கக்கூடிய அணிகளாக இருக்கின்றன.
இந்த காரணத்தினால் யார் அரை இறுதிக்கு செல்வார்கள், கோப்பையை கைப்பற்றுவார்கள்? என்கின்ற கேள்வி குறித்து நிறைய சந்தேகங்கள் பலருக்கும் இருந்து வருகிறது. நிச்சயமாக தொடர் ஒருதலைப் பட்சமாக சாயாது என்று நம்புகிறார்கள்.
தற்பொழுது உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டேல் ஸ்டெய்ன் எந்த இரு அணிகள் இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதிக் கொள்ளும் என்கின்ற தன்னுடைய கணிப்பை விரிவாக கூறியிருக்கிறார்.