
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இருந்து முன்னணி வீரர் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டது தான் இந்திய கிரிக்கெட்டில் பேசுப்பொருளாக மாறியது.
ஃபார்ம் அவுட்டில் உள்ள விராட் கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் மோசமாக சொதப்பினார். எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு தேவை எனக்கேட்டிருந்த கோலி, ஆசியக்கோப்பை தொடரில் நல்ல கம்பேக் தருவேன் என தேர்வுக்குழு அதிகாரியிடம் கூறியிருக்கிறார். அதன்படி தான் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது ஃபார்ம் குறித்து பேசியுள்ள விராட் கோலி, “இந்திய அணிக்கு ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவுவதே தான் தற்போதைக்கு எனது எண்ணத்தில் உள்ளது. அதற்காக நான் என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன். நிச்சயம் அதனை செய்து முடிப்பேன்” என விராட் கோலி கூறியுள்ளார்.