
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்த இந்தியா தங்களின் 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 272/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷாஹிதி 80 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 16 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 131 ரன்கள் குவித்து நிறைய உலக சாதனைகளை படைத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.
அவருடன் இஷான் கிஷன் 47, விராட் கோலி 55, ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்ததால் 35 ஓவரிலேயே இந்திய அணி வெற்றிபெற்றது. ஆஃப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் இந்தியாவின் விராட் கோலியிடம் சண்டையில் ஈடுபட்டு கை கொடுக்க மறுத்ததும், அதற்கிடையே கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பெரிய சர்ச்சையாக மாறியது.