
ENG vs IND, 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணி ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மான்செஸ்டரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவெ 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர் நிதிஷ் ரெட்டி காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் படி நிதிஷ் ரெட்டி உடற்பயிற்சி மேற்கொண்ட நிலையில் காயத்தை சந்தித்துள்ளதாகவும், இதனால் அவர் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.