வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் இலங்கை அணியை எதிர்த்து உள்நாட்டில் விளையாடுகிறது. இதில் முதலில் நடக்கும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் அடுத்து நடக்கும் ஒருநாள் தொடருக்கு துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் போட்டி தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்கிறார்.
இந்த இரு தொடர்களுக்கும் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருந்தது. குறிப்பாக டி20 அணியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பெறவில்லை. சஞ்சு சாம்சன் டி20 அணியிலும் இசான் கிசான் இரு அணிகளிலும் இடம் பெற்றிருக்கிறார்கள்!
இந்நிலையில், இந்த இரு தொடர்களில் ஒருநாள் தொடருக்கு யார் தொடக்க வீரர் மற்றும் முதல் ஆறு வீரர்கள் யார் என்பது குறித்து கௌதம் கம்பீர் தனது அதிரடியான கருத்தை முன் வைத்திருக்கிறார்.