Advertisement

நான்காவது, ஐந்தாவது பேட்டிங் வரிசை உறுதியாகி விட்டது- ரிஷப் பந்த்

கேப்டன் ஷுப்மன் கில் நான்காவது இடத்திலும், நான் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன் என்று இந்திய அணியின் துணை ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement
நான்காவது, ஐந்தாவது பேட்டிங் வரிசை உறுதியாகி விட்டது- ரிஷப் பந்த்
நான்காவது, ஐந்தாவது பேட்டிங் வரிசை உறுதியாகி விட்டது- ரிஷப் பந்த் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 18, 2025 • 11:09 PM

Rishabh Pant: இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்த வரையில் மூன்றாம் வரிசையில் யார் யார் விளையாடப் போகிறார்கள் என்பது குறித்து இன்னும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 18, 2025 • 11:09 PM

இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ரோஹித் சா்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது.

மேற்கொண்டு சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிஷப் பந்த், “தனிப்பட்ட முறையில், நான் நல்ல தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம், பேட்டிங், பீல்டிங் அல்லது விக்கெட் கீப்பிங் என எதுவாக இருந்தாலும், என் பங்களிப்பை வழங்க விரும்புகிறேன். நான் எப்போதும் விளையாடும் சிந்தனை செயல்முறை அதுதான், இங்கிலாந்திலும் எனது செயல்முறையில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை என்று நம்புகிறேன். 

இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்த வரையில் மூன்றாம் வரிசையில் யார் யார் விளையாடப் போகிறார்கள் என்பது குறித்து இன்னும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாக நான்கு மற்றும் ஐந்தாம் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் கேப்டன் ஷுப்மன் கில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று நினைக்கிறேன், நான் எப்போதும் போல் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன்.

ஷுப்மானுக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு, குறிப்பாக மைதானத்திற்கு வெளியே. நீங்கள் மைதானத்திற்கு வெளியே நல்ல நண்பர்களாக இருந்தால், அது இறுதியில் மைதானத்திலும் உங்களுக்கு உதவியாக இருக்கும். நானும் அவரும் மிகவும் நன்றாக இணைகிறோம். எங்களுக்குள் இருக்கும் இடையே உள்ள கம்போர்ட் ஸோன் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports