
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று துனெடினில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 9 ரன்களிலும், குசால் மெண்டீஸ் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த குசால் பெரேரா - தனஞ்செயா டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குசால் பெரேரா 35 ரன்களிலும், தனஞ்செய டி சில்வா 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சரித் அசலங்கா 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் தசுன் ஷனகாவும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.