Advertisement
Advertisement
Advertisement

இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்கிறார்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இந்தியா எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்பதே வெற்றிக்கான வழி என்று நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 09, 2023 • 18:03 PM
இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்கிறார்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்!
இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்கிறார்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்! (Image Source: Google)
Advertisement

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் உச்சத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிச் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

அதிலும் வலுவான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற டாப் அணிகளை தோற்கடித்த இந்தியா மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவையும் 83 ரன்களுக்கு சுருட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் பேட்டிங் துறையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில், ராகுல், ஸ்ரேயாஸ் உட்பட அனைவருமே மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்

Trending


அவர்களுக்கு நிகராக பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி எதிரணிகளை அசால்டாக ஆல் அவுட் செய்து பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். அதே போல ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் சுழலில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருவதால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லமால் நிற்க மாட்டோம் என்ற வகையில் இந்தியா மிரட்டி வருகிறது என்றே சொல்லலாம்.

இதை தொடர்ந்து நெதர்லாந்துக்கு எதிராக சம்பிரதாய கடைசிப் போட்டியில் விளையாடும் இந்தியா அடுத்ததாக அழுத்தம் நிறைந்த நாக் அவுட்டில் வெற்றி காண்பதற்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் பேட்டிங் மற்றும் பவுலிங் துறையில் தொட முடியாத அளவுக்கு மிரட்டலாக செயல்பட்டு வரும் இந்தியாவுக்கு எதிராக நாக் அவுட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பதே எதிரணிகள் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இந்தியா எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்பதே வெற்றிக்கான வழி என்று நினைக்கிறேன். இதற்காக இந்தியா சேசிங் செய்வதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் அவர்களிடம் மகத்தான சேசிங் செய்யும் வீரர் விராட் கோலி இருக்கிறார். ஆனால் இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்து வருகிறார்கள்.

அதாவது இரவு நேரத்தில் சிராஜ், ஷமி, பும்ரா ஆகியோரது பந்துகள் தொட முடியாத அளவுக்கு தரமாக இருக்கிறது. எனவே பகல் நேரத்திலேயே அவர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வது சாதகத்தை ஏற்படுத்தலாம். அவர்களிடம் பவரான பேட்டிங் இருக்கிறது. இருப்பினும் தற்சமயத்தில் அபாரமான பவுலிங் தான் இந்திய அணியை அச்சுறுத்தலாக காட்சிப்படுத்துகிறது. அவர்களிடம் ஜடேஜா – குல்தீப் போன்ற சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தும் ஸ்பின்னர்களும் இருக்கின்றனர். போதாக்குறைக்கு அஸ்வின் வாய்ப்புக்காக அமர்ந்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement