
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணி நேஹல் வதேராவின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரானா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா “என்ன தவறு நடந்தது என்று நான் எல்லா இடங்களையும் யூகித்து பார்க்கிறேன். எங்கள் வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. ஒரு பேட்டிங் யூனிட் ஆக எங்களுக்கு இது மோசமான நாள்.