
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்திய்துடன் தொடரையும் முழுமையக கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது டையில் முடிவடைந்தது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது எதிராக 27 வருடங்களுக்கு பின், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியும் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பவர்-பிளே ஓவர்களில் தனது விக்கெட்டைத் தூக்கி எறியும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், முடிந்தவரை அதிக ரன்கள் எடுப்பதே தனது திட்டம் என்றும் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “பவர்-பிளேயின் போது எடுக்கப்படும் ரன்கள் முக்கியமானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதன் பிறகு விக்கெட்டுகள் கொஞ்சம் மெதுவாக மாறும், பந்து கொஞ்சம் திரும்பும், மேலும் ஃபீல்டர்கள் 30யார்ட்க்கு வெளியே ஃபில்டிங் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என்று எனக்குத் தெரியும்.