Advertisement

தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது - ஷாஹின் அஃப்ரிடி!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது ஐசியூவில் உள்ளது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார்.

Advertisement
தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது - ஷாஹின் அஃப்ரிடி!
தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது - ஷாஹின் அஃப்ரிடி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 12, 2025 • 12:06 PM

நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 12, 2025 • 12:06 PM

இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.  இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.

Trending

இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸவான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார். இதுதவிர்த்து பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் எவ்வாறு சேர்க்கப்பட்டார் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹீத் அஃபிரிடி விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,”நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் எதன் அடிப்படையில் ஷதாப் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது செயல்பாடுகள் எப்படி இருந்தது. எதனடிப்படையில் அவர் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணியை முக்கியமான கிரிக்கெட் தொடர்களுக்கு தயார் செய்வது குறித்து பேசுகிறோம். ஆனால், தொடர் நெருங்கு சூழலில் நாம் தவறான முடிவினை எடுக்கிறோம். அதனால், மீண்டும் அணியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் நாம் அணியை எவ்வாறு முன்னேற்றுவது என்பதை சிந்திப்பதாக நினைக்கிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும்போதெல்லாம், வாரியத்தின் முடிவுகளிலும், கொள்கைகளிலும் தொடர்ச்சியும், சீரான தன்மையும் இல்லை. அணி தோல்வியைத் தழுவும் போது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை மாற்றுகிறோம். ஆனால், கிரிக்கெட் வாரியம் எடுக்கும் தவறான முடிவுகளின் காரணமாக ஏற்படும் தோல்விக்கு யாரும் இங்கு பொறுப்பேற்றுக் கொள்வதில்லை” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக கடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தோல்வியைத் தழுவிய பிறகு கேப்டன் பாபர் ஆசாம் தனது பதிவியில் இருந்து விலகினார். ஆனால் அதன்பின் மீண்டும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் நியமிக்கப்பட்டார். பிற்கு அத்தொடரிலும் அந்த அணி தோல்வியடைந்ததை அடுத்து அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டார். தற்போது அவரின் கேப்டன் பதவியும் கேள்விக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement