
வங்கதேச அணி தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரானது முன்னதாக மே 25 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக மே 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடருக்கான வங்கதேச அணியும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், அணியின் துணைக்கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த சைம் அயூப் மற்றும் ஃபகர் ஸ்மான் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.