
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்பாக, இந்திய அணிக்கு கிடைக்கும் ஒரு நாள் போட்டிகள் எல்லாமே மிக முக்கியமானவை.
இன்று தொடரின் முதல் போட்டி நடக்க இருக்கின்ற காரணத்தால் சம்பிரதாய முறைப்படி பத்திரிகையாளர்களை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சந்தித்து பேசி இருக்கிறார். இதில் அவரிடம் பல முக்கியமான விஷயங்களை பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து வருடத்திற்கு பிறகு ஆசியா தாண்டி விராட் கோலி சதம் அடித்திருப்பது குறித்தும் கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “இந்த கேள்விக்கு நான் பலமுறை பதில் சொல்லி விட்டேன். நாங்கள் உள்ளுக்குள் என்ன பேசிக் கொள்கிறோம் எங்களுக்குள் என்ன விளையாட்டு தொடர்பாக உரையாடல்கள் நடக்கிறது என்பது வெளியில் இருப்பவர்களுக்கு சுத்தமாக தெரியாது. எனவே வெளியில் என்ன பேசுகிறார்களோ அவர்கள் பேசிக் கொள்ளட்டும்.