
Ponting's strange IPL request for Pant, reveals chat with injured batter (Image Source: Google)
அண்மையில், கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எலும்பு முறிவுகள் ஏதும் இல்லாத போதிலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கடினம் எனவே கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாடுவது கடினம் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிஷப் பந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் ரிஷப் பந்த் குறித்து கூறும்போது,”ரிஷப் பந்த் எனக்கு மிகவும் பிடித்த நபர். கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் அவருடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்.