-mdl.jpg)
இந்திய அணியின் இளம் அதிரடி வீரராக பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார் பிரித்வி ஷா. ஆனால் ஊக்க மருந்து சர்ச்சையால் தடை, சீனியர் வீரர்களை மதிக்காதது, களத்திற்கு வெளியில் மோதல் என்று பிரச்னைகளில் சிக்கினார் பிரித்வி ஷா. ஐபிஎல் தொடரில் ஃபார்மை மீட்டெடுக்க முடியாததுடன், ஃபிட்னஸ் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.
இதனால் ஆசியப் போட்டிகளுக்கான அணியில் கூட பிரித்வி ஷா சேர்க்கப்படவில்லை. ஃபார்மில் இருந்திருந்தால் ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு பிரித்வி ஷா தான் தலைமை தாங்கியிருப்பார். ஏனென்றால் யு19 இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். ஆனால் ஃபார்மில் இல்லாததால், வேறு வழியின்றி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் பிரித்வி ஷா. ஃபார்மில் இல்லாத பிரித்வி ஷாவை நார்த்தம்டன்ஷையர் ஒப்பந்தம் செய்தது ஏன் என புரியாமல் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால் பிரித்வி ஷா கிண்டல்களுக்கு செவி கொடுக்காமல், வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.