
இந்த உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12-சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நமீபியா அணியை எதிர்த்து தற்போது விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி இடம் பெற்றிருந்த இந்த குரூப் இரண்டில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று முன்னேறி உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி பெறும் வெற்றியோ, தோல்வியோ எந்த முடிவையும் மாற்றாது.
எனவே இந்த போட்டி கேப்டன் விராட் கோலிக்கு கடைசி போட்டியாக அமைந்துள்ளது. மேலும் கேப்டனாக விராட் கோலி கடைசி போட்டியில் விளையாடுகிறார் என்பதால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியோடு இந்திய அணி நாடு திரும்பி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருக்கிறது. அந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய கேப்டன் செயல்பட இருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி டாஸிற்கு பிறகு சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். அப்படி அவர் கூறுகையில், “இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். எப்போதுமே டாஸ் ஜெயிப்பது மிக முக்கியமான விசயம். கடைசி இரண்டு போட்டிகளாக நாங்கள் டாசில் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறோம். இதைத்தான் முதல் நாளில் இருந்தே எதிர்பார்த்தோம்.