
ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை வீரர் ரஹானே 261 பந்துகளில் 26 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 204 ரன்களை விளாசினார். இவருடன் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஆகியோரும் அதிரடி சதங்களை விளாச மும்பை 651/6 என்று டிக்ளேர் செய்தது.
இந்நிலையில் இந்த இரட்டைச் சதத்திற்குப் பிறகு ரஹானே அளித்த பேட்டியில் இந்திய பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன என்று கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், “என் சராசரி குறைந்ததற்கு என் பேட்டிங் ஸ்டைலில் உள்ள கோளாறு காரணமல்ல, என் பேட்டிங் ஸ்டைலில் கோளாறு இல்லை. 3, 4, மற்றும் 5-ம் நிலைகளில் இறங்கும் இந்திய வீரர்களைக் கவனியுங்கள். சராசரி குறைந்ததை கவனிப்பீர்கள், குறிப்பாக புஜாரா, விராட் மற்றும் என் சராசரிகள் குறைந்ததற்குக் காரணம் இந்தியாவில் விளையாடிய பிட்ச்களே.