Advertisement

IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 18, 2023 • 21:00 PM
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தவரிசையில் ஆசிய அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடின. 

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை வீழ்த்தி 8ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியது. இதையடுத்து இம்மாத இறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடாவுள்ளது. 

Trending


அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் செப்டம்பர் 22ஆம் தேதி மொஹாலியில் முதலாவது ஒருநாள் போட்டியும், செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூரில் 2ஆவது ஒருநாள் போட்டியும், செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட்டில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது. 

மேலும் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணி மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி என இரு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலிரு ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.   

அதேசமயம் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, பிரஷித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டு, ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிஙடன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலிரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: கே.எல்.ராகுல் (கே), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல்*, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.    


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement