
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.
கேப்டன்சிக்கான தேர்வில் ஷுப்மன் கில், கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் புமரா ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணங்களால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பி இருக்காது என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேற்கொண்டு பும்ராவும் அணியின் கேப்டன் பதவியை ஏற்கபோவதில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஷுப்மன் கில் தான் அணியின் அடுத்த கேப்டன் என்று கூறப்படுகிறது.