
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டோனால்ட், அவருடைய காலத்தில் விளையாடும்போது தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கி இருக்கிறார். தற்போது இந்திய வங்கதேச டெஸ்ட் தொடரின் போது டிராவிட்டும், ஆலன் டோனால்டும் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
அப்போது ராகுல் டிராவிட் உங்களை பயிற்சியாளராக பார்ப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பெல்லாம் முகத்தில் கிரீம் பூசி பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும் அளவுக்கு காணப்படுவீர்கள். இப்போது தான் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். இதனை டிராவிட் தற்போது செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இதை ஆலன் டோனால்ட் கேட்டதும், 1997 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலன் டோனல்ட், “1997 ஆம் ஆண்டு இந்திய அணி டர்பனில் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. அப்போது சச்சினும் டிராவிட்டும் எங்கள் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இதனால் எனக்கு கோபம் வந்துவிட்டது.