
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட கையோடு இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பை 2023 தொடருக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒன்று கூடினர். அங்கு வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பயிற்சி போட்டியும் நடத்தப்பட்டது.
இதில், யார் யாருக்கு எந்த இடம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, போட்டி நடக்கும் போது வீரர்களின் வரிசையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது 30ஆம் தேதி நாளை முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் நடக்கிறது. இந்த நிலையில், ரோஹித் சர்மா தலமையிலான இந்திய வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.