
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது இந்தூரில் நடைபெற்று வருகிறது. தற்போது ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி மீண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பதில் கேஎல் ராகுல் ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.
தற்போது ராகுலுக்கு கல்யாணம் காரணமாக தொடரில் விளையாடவில்லை என்றாலும், இஷான் கிஷன் அந்த பணியை செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் விக்கெட் கீப்பர்களின் நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் தெரிந்த விக்கெட் கீப்பரை தான் இந்திய அணி தேடி வருவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், “தோனியின் வருகைக்குப் பிறகு விக்கெட் கீப்பர் மட்டும் தெரிந்த வீரர் அணிக்கு தேவையில்லாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. இப்போது இந்திய அணிக்கு அதிர்ஷ்டமான காலம் என்று தான் கூறுவேன். ஒரு காலத்தில் விக்கெட் கீப்பர் யாரும் இல்லாத நிலையில் நான் அந்தப் பணியை செய்தேன். அதன் பிறகு தோனி போன்ற வீரர்கள் வந்தவுடன் விக்கெட் கீப்பர்களுக்கான நிலையே மாறிவிட்டது.