
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக விராட் கோலி மற்றும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருவரும் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணிக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனி இடம் இருக்கிறது. கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரது பொறுப்பின் கீழான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, உலகத்தில் எந்த நாட்டிலும் டெஸ்ட் தொடரை கைப்பற்றக்கூடிய அளவில் இருந்தது.
மேலும் இவர்களுடைய காலத்தில்தான் இந்திய வேகம் பந்துவீச்சுத் துறை எந்த அளவிலும் இல்லாத அளவுக்கு முன்னேறி மேலே வந்தது. உலகில் எந்த நாட்டு பேட்ஸ்மேன்களையும் அவர்களுடைய நாட்டிலேயே அச்சுறுத்தும் வகையில் இந்திய வேகப்பந்து வீச்சுத் துறை வளர்ந்தது. இந்நிலையில் கேப்டனாக விராட் கோலியும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் பொறுப்பில் இருந்து நகர, புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் பொறுப்புக்கு வந்தார்கள்.
ஆனால் எதிர்பார்த்தபடி ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் இந்திய கிரிக்கெட்டுக்கு அமையவில்லை. இவர் பொறுப்பேற்ற முதல் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. அதற்கு அடுத்து இங்கிலாந்து, 2022 ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, வங்கதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி என்று தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது.