
Rahul Dravid Opens Up After Embarrassing Loss Against England In 5th Test (Image Source: Google)
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தியா ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்ததால், இப்போட்டியில் டிரா செய்தாலே போதும் என்ற நிலை இருந்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 416/10 ரன்களை குவித்தது. ரிஷப் பந்த் 146 (111), ஜடேஜா 104 (194) ஆகியோர் சதம் கடந்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 106 (140) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்திருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 284/10 ரன்களை மட்டும் சேர்த்து, 132 ரன்கள் பின்தங்கியது.
மெகா முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் புஜாரா 66 (168), ரிஷப் பந்த் 57 (86) ஆகியோர் மட்டும் அரை சதம் கடந்த நிலையில், இந்தியா 245/10 ரன்களை மட்டும் சேர்த்து, இங்கிலாந்துக்கு 378 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.