Advertisement

நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம் - ராகுல் டிராவிட்!

நாங்கள் ஒவ்வொரு முறையும் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மக்களை ஏமாற்றம் அடைய செய்கிறோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan July 12, 2023 • 11:42 AM
Rahul Dravid reacts to those who keep trolling about playing XI every time!
Rahul Dravid reacts to those who keep trolling about playing XI every time! (Image Source: Google)
Advertisement

விராட் கோலி கேப்டனாகவும் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதற்கு பின்னால் ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் ஆகவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ரவி சாஸ்திரி போல் தலைமை பயிற்சியாளர் பதவியில் ராகுல் டிராவிட் பெரிய வெற்றிகளை பெற்றெடுக்கவில்லை. 

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஆரம்பித்து, ஆசிய கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெறாதது, டி20 உலக கோப்பையில் அரையிறுதி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வி என்று இந்த பட்டியல் இருக்கிறது. ஆனாலும் ரவி சாஸ்திரியை விட ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் நடக்கக்கூடிய மிகச்சிறப்பான விஷயம் என்னவென்றால் வீரர்களுக்கு வாய்ப்புகள் உடனுக்குடனே நிறுத்தப்படுவதில்லை. அணியில் எடுக்கப்பட்ட வீரர்களை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

Trending


இந்த வகையில் இந்திய அணியில் நிறைய வீரர்கள் உள்ளே வந்து அவர்கள் தங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று நம்பிக்கையுடன் விளையாட செய்கிறார்கள். ராகுல் டிராவிட் அண்டர் 19 அணிக்கு எப்படி ஆன பயிற்சி முறைகளை வைத்திருந்தாரோ, அதேபோல இங்கும் அணிக்கு வரும் இளம் வீரர்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார்.

தற்பொழுது பயிற்சியாளர் பொறுப்பை பற்றி பேசியுள்ள ராகுல் டிராவிட், “நீங்கள் பயிற்றுவிக்கும் ஒவ்வொரு வீரர்களையும் தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்கிறீர்கள். மேலும் தனிப்பட்ட தொடர்புகளை உருவாக்க முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு கிரிக்கெட் வீரர்களாக மட்டுமல்லாமல் மக்களாகவும் பயிற்றுவிக்க முயற்சி செய்கிறீர்கள்.

இப்படி நீங்கள் உருவாக்கும் பொழுது அவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த இடத்தில் நீங்கள் எதார்த்தம் உணர்ந்தவராக இருக்க வேண்டும். உருவாக்கும் அத்தனை பேரும் வெற்றி பெறப் போவதில்லை என்று உங்களுக்கு தெரிய வேண்டும். சில நேரங்களில் நீங்கள் மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

நாங்கள் ஒவ்வொரு முறையும் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மக்களை ஏமாற்றம் அடைய செய்கிறோம். விளையாடும் அணியை தேர்வு செய்யும் பொழுது, விளையாடுவதற்கு தகுதியான வீரர்கள் எப்பொழுதும் வெளியில் இருக்கவே செய்கிறார்கள். அந்த நேரத்தில் மக்களுக்கு ஏமாற்றம் உண்டாகிறது. அவர்கள் மோசமான உணர்வைப் பெறுகிறார்கள்.

இப்படியான நேரத்தில் நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். நம்மிடம் இருக்கும் எல்லா வீரர்களையும் விளையாட வைக்க முடியாது. விதி அனுமதிக்கின்ற அளவில்தான் வீரர்களை விளையாட வைக்க முடியும். இதற்கு பதில் சொல்வது மிகவும் கடினமான ஒரு வேலை.

வீரர்களுக்கான வாய்ப்பு மற்றும் பயிற்சி என்பது நாம் எப்பொழுதும் அவர்களுடன் குறைந்தபட்சம் வெளிப்படையாக தொடர்பில் இருக்க வேண்டும். இதில் நாம் நேர்மையாக இருந்தால் எந்த அரசியல் மற்றும் எந்த நாடகத் தன்மையும் இல்லாமல் நாம் உண்மையாக இருக்க முடியும். இது ஒரு வழிகாட்டக்கூடிய கொள்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement