
இந்தியா வந்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியிலும் டாஸை வென்ற தென் ஆப்ரிக்கா அணி, கடந்த நான்கு போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் வழக்கம்போல் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3.3 ஓவரில் 28/2ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது, மழை நின்றபின் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழை விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த தொடர் 2-2 என சமன் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த தொடர் குறித்தான பல்வேறு விஷயங்களை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் பேசி வருகின்றனர். அந்த வரிசையில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவிய பொழுதும், அதே ஆடும் லெவனை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான விளக்கத்தை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.