
Rahul Dravid's massive statement on India captain after Bangladesh seal series (Image Source: Google)
வங்கதேசம் சென்று ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்து இருக்கிறது.
முதல் ஒருநாள் போட்டியில் துரதிஷ்டவசமாக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை போராடி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 271 ரன்கள் அடித்திருந்தது.
அதை சேஸ் செய்த இந்திய அணி 64 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தபோது, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங் செய்து கொண்டிருக்கையில், பந்து பட்டு கட்டைவிரலில் படுகாயம் அடைந்ததார்.