
ஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் என்ற புகழைப் பெற்றிருந்தவர் கேதர் ஜாதவ். இவர், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் இடம்பற்றிருந்த சமயத்தில், வரலாற்றிலேயே அதிக அளவு ஓட்டப்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்திருப்பார். கேதர் ஜாதவ் பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என பன்முகம் கொண்டவர். ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேதர் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய விதம் ரசிகர்களை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
அதிலும் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கிய கேதர் ஜாதவ், அந்த ஆட்டத்தில், ஃபில்டர்களை எண்ணிவிட்டு, இறங்கி வந்து டோக் என்று ஒரு கட்டையை போட, அன்று முதல் சமூக வலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளானார். இதனையடுத்து, சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட கேதர் ஜாதவ், அதன் பிறகு சன்ரைசர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 405 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் கூட கேதர் ஜாதவின் பெயர் இல்லை. ஏலத்திற்கு பெயர் கொடுத்தும் நிராகரிக்கப்பட்டதால் விரக்தியின் உச்சத்தில் இருந்த கேதர் ஜாதவ் இன்று ரஞ்சி கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.