
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி வந்தது. குறிப்பாக முதல் விக்கெட்டுக்கு டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஜோடி 50 ரன்கள் சேர்த்தது.
இதில் டேவிட் வார்னர் 15 ரன்களில் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து மார்னஸ் லாபஸ்சேன், கவாஜா ஜோடி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் மதிய உணவு இடைவெளிக்கு முன் அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுக்கப்பட்டது. இதில் ஸ்மித் டக் அவுட் ஆகியும் மார்னஸ் லாபஸ்சேன் 18 ரன்களிலும் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினர்.
இதேபோன்று விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் அஸ்வின் பந்தில் டக்அவுட் ஆகினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.