
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்சர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதனையொட்டி ஏற்கனவே அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார், விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், அம்பத்தி ராயுடு, கைல் ஜேமிசன், சிசண்டா மகாலா, சேனாபதி, பகவத் வர்மா, ஆகாஷ் சிங் உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்துள்ளது.
இதன் மூலமாக சிஎஸ்கே அணி 6 இடங்களை நிரப்ப வேண்டிய நிலை உள்ளது. இதற்காக சிஎஸ்கே அணியிடம் மொத்தமாக ரூ.31.4 கோடி கையிருப்பில் வைத்துள்ளது. இதன் மூலமாக ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளருக்கான இடங்களை எளிதாக நிரப்ப முடியும். அதேபோல் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டேரல் மிட்சல், கோட்சியே உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை ஒருவரையாவது வாங்கும் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை என்ற விமர்சனங்கள் நீண்ட ஆண்டுகளாக சிஎஸ்கே மீது உள்ளது. அதனை மாற்ற இந்த மினி ஏலத்தில் வாய்ப்புகள் அமைந்துள்ளது. ஏனென்றால் மெகா ஏலத்தின் போது இளம் வீரர் ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருந்தது.