
காயத்தினால் சில மாதங்களாக விளையாடாமல் இருந்த நட்சத்திர விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர், தனது முதல் கம்பேக் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்த, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவிற்கு ஆலோசனை கூறி வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தான் என்பது தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. அதற்கேற்ப கேஎல் ராகுலும் சிறப்பாக விளையாடி வருவதால், எந்த மாற்றத்தையும் செய்ய தேவையில்லை என்று ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேஎல் ராகுல் குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை விடவும், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை நான் அதிகம் ரசித்து விளையாடி இருக்கிறேன் என்று தோனி ஒருமுறை என்னிடம் கூறினார். ஏனென்றால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அதிக பரபரப்புடன் இருக்கும்.