
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது . இந்தத் தொடரின் முதலாவது போட்டி கடந்த ஒன்பதாம் தேதி நாக்பூரில் நடைபெற்றது . இந்தப் போட்டியில் இன்று இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது .
இந்தப் போட்டியில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் . மேலும் இந்திய அணியின் பேட்டிங்கின் போது 70 ரன்களை சேர்த்தார் . அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார் .
தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக ஆட்டநாயக்கன் விருது ரவீந்திர ஜடேஜா விற்கு வழங்கப்பட்டது . அப்போது பேசிய அவர், “ஐந்து மாதங்களுக்குப் பின் இந்திய அணிக்கு திரும்ப வந்து டேட்டிங் மற்றும் பந்துவீச்சின் மூலம் பங்களிப்பை வழங்கியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது . காயத்திலிருந்து மீண்டு வந்த போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஓய்வில்லாமல் உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்தேன்.