Advertisement

தேசிய கீதத்தின் போது கண்ணீர் விட்டு அழுத சாய் கிஷோர் - வைரலாகும் காணொளி!

இந்தியாவின் தேசிய கீதம் வாசிக்கப்பட்ட போது சாய் கிஷோர் தம்முடைய உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 03, 2023 • 11:58 AM
தேசிய கீதத்தின் போது கண்ணீர் விட்டு அழுத சாய் கிஷோர் - வைரலாகும் காணொளி!
தேசிய கீதத்தின் போது கண்ணீர் விட்டு அழுத சாய் கிஷோர் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Advertisement

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் நேபாளை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 202/4 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக சதமடித்து 100 ரன்களும், ரிங்கு சிங் 37 ரன்களும் எடுக்க நேபாள் சார்பில் அதிகபட்சமாக திபேந்திர சிங் 2 விக்கெட்டுகள் சாய்த்தார் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 203 ரன்களை துரத்திய நேபாளுக்கு குசால் புர்டெல் 28, ஆசிப் சேக் 10, கௌசல் மல்லா 29 என ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

Trending


அதனால் மிடில் ஆர்டரில் திப்பெந்திர சிங் 32, சுந்தீப் ஜோரா 29 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் நேபாளை 179/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தல 3 விக்கெட்களை சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் தமிழக இளம் வீரர் சாய் கிஷோர் அறிமுகமாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

சமீப வருடங்களாகவே உள்ளூர் தொடரில் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அசத்தி வரும் அவர் முதல் முறையாக நாட்டுக்காக விளையாடும் பொன்னான வாய்ப்பு இந்த தொடரில் பெற்றார். அதனால் தம்முடைய கனவு தொப்பியை வாங்கிய அவர் வாழ்நாள் லட்சியத்தை எட்டியதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அதை தொடர்ந்து வழக்கம் போல போட்டு துவங்குவதற்கு முன்பாக இரு நாடுகளின் தேசிய கீதம் வாசிக்கப்பட்டது.

 

அப்போது இந்தியாவின் தேசிய கீதம் வாசிக்கப்பட்ட போது அனைத்து வீரர்களும் பெருமை கலந்த உணர்வுடன் அதை பாடிய நிலையில் சாய் கிஷோர் மட்டும் தம்முடைய உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். குறிப்பாக என்றாவது ஒருநாள் தாய்நாட்டுக்காக விளையாட மாட்டோமா என்று பல நாட்கள் கண்ட கனவு இன்று பலித்ததால் முதல் முறையாக இந்திய வீரராக தேசிய கீதத்தை கேட்ட போது பற்றி கட்டுப்படுத்த முடியாமல் அவர் அல்லது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

அப்படி உணர்ச்சியுடன் முதல் முறையாக இந்தியாவுக்கு விளையாடிய அவர் 4 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்து சிறப்பாக செயல்பட்டார். இந்த வகையில் அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம். இதைத்தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி இந்தியா அரையிறுதிப் போட்டியில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement