Advertisement

சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான்; யுவராஜ் சிங்!

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் என்ற சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 17, 2022 • 13:16 PM
'Reads the game well..': Yuvraj Singh names his choice for Virat Kohli's successor as Test captain
'Reads the game well..': Yuvraj Singh names his choice for Virat Kohli's successor as Test captain (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி நேற்று முந்தினம் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த சில தினங்களில் கோலி இப்படி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து விராட் கோலி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்தும் கேப்டன் பதவியைத் துறந்தது குறித்து பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய கிரிக்கெட்அணியின் கேப்டனாக செயல்படப்போவது யார் என்பது தேர்வுக் குழுவினரை பொறுத்தவரைக்கும் ஒரு விவாதமாக இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை பார்க்கிறேன்.

Trending


ஏனெனில் ரிக்கி பாண்டிங் விலகியபோது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. அப்போதிலிருந்தே ரோகித் சர்மாவின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் கூட 50, 100, 150, 200 என தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே போன்று தான் தற்போது ரிஷப் பந்தும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து இந்த தென் ஆப்பிரிக்க தொடரின் கடைசி போட்டியில் அற்புதமான சதத்தை அடித்தார்.

டெல்லி அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் செயல்பட்டு வரும் பந்த் தனது கடமை மற்றும் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே நிச்சயம் இந்திய டெஸ்ட் அணிக்கும் அவர் கேப்டனாக செயல்படும் பட்சத்தில் அவரது திறனும் அதிகரிக்கும்” என்று தான் நம்புவதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர் கூறிய இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கும் சுனில் கவாஸ்கர் கூறிய அனைத்து கருத்துக்களும் சரியானவை தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ஒரு கருத்தில், “ரிஷப் பந்த் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்பது முற்றிலும் சரியானதுதான். ஏனெனில் ஸ்டம்பிற்கு பின்னால் நின்று போட்டியை மிகச் சரியாக கணிக்கிறார்” என்று யுவராஜ் சிங் ரிஷப் பந்திற்கு ஆதரவாக ஒரு கருத்தினை தற்போது பகிர்ந்துள்ளார். அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement