
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங்குக்கு இடம் கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என கிரிக்கெட்டின் பல மட்டத்திலும் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயத்தில் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் திலக் வர்மா என இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களின் தேவை அதிகமாக இருப்பதற்கு இது சரியான முடிவு தான் என்றாலும், மற்றும் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் இருந்திருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் திலக் வர்மா 164 ஸ்ட்ரைக்ரேட்டில் 42 ஆவரேஜில் 343 ரன்கள் எடுத்திருந்தார். ரிங்கு சிங் 14 ஆட்டத்தில் 150 ஸ்ட்ரைக்ரேட்டில், 60 ஆவரேஜில், 474 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் திலக் வர்மாவுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா மிக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.