
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவின் ஜித்தாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் (1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டினர்) தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் பங்கேற்கின்றனர். இதில் வெளிநாடுகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 76 வீரர்களும் பங்கேற்கவுள்ள நிலையில், குறைந்த பட்சமாக ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலியைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். மேற்கொண்டு 320 சர்வதேச வீரர்களும், 1,224 ஆன்கேப்ட் வீரர்களும், 30 அசோஷியட் தேசத்தை சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 48 சர்வதேச வீரர்களும், 272 வெளிநாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இதுதவிர்த்து 965 இந்திய அன்கேப்ட் வீரர்களும், 104 வெளிநாடுகளைச் சேர்ந்த அன்கேப்ட் வீரர்களும் பங்கேற்கின்றன. அதேசமயம் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய 155 வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்த பட்டியலில் பங்கேற்கும் வீரர்களுடைய அடிப்படை தொகை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.