ENG vs IND: தொடரிலிருந்து விலகிய ரிஷப் பந்த்; ஜெகதீசனுக்கு அழைப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார்.

Anderson–Tendulkar Trophy: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இதனையாடுத்து மான்செஸ்டரில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்ததை அடுத்து, இங்கிலாந்து அணி முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும்.
இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பந்த் காயத்தை சந்தித்தார். அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவருக்கு எழும்பு முறிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் கரணமாக அவர் 6 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவ குழு பரிந்துறைத்துள்ளதால், அவர் இத்தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிஷப் பந்த் விலகியதை அடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் ஜெகதீசன் இதுவரை 52 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன் 3,373 ரன்களைச் சேர்த்துள்ளார். இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகமாகவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், நாராயண் ஜெகதீசன்.
Win Big, Make Your Cricket Tales Now