
Rishabh Pant Records: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் முன்னாள் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.